India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதராஸி படம் தன் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ருக்மினி வசந்த் தெரிவித்துள்ளார். தனக்கு தொடக்க காலத்திலேயே, அன்பை அள்ளிக்கொடுக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும், மதராஸி இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி சொல்லிய அவர், தான் SK-வின் certified ஃபேன் கேர்ள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
IIT உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ME, M.TECH, MS, MA ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கான விண்ணப் பதிவு இன்று தொடங்கி, செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <
தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 438 ▶குறள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
▶ பொருள்: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்க கைது நடவடிக்கையை கருவியாக பாஜக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஜெயசூர்யா என்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். திருச்சி அருகே நடத்த விபத்தில் காயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநாட்டுக்கு சென்று திரும்பிய வழியில் பிரபாகரன், ரித்திக் ஆகியோர் பலியான நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளது, தவெக தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘சாவா’ பாடம் உள்ளது. ₹808 கோடியுடன் சாவா முதல் இடத்திலும், குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வசூலை வாரிக்குவித்த ‘சயாரா’ ₹542 கோடியுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகி 10 நாட்களில் ₹468 கோடியை வசூல் செய்து 3-வது இடத்தில் உள்ளது. கூலியுடன் வெளியான வார்(₹300 கோடி), ஹவுஸ்புல் 5(₹292 கோடி) ஆகிய படங்கள் அடுத்த வரிசையில் உள்ளன.
▶ஆகஸ்ட் 25, ஆவணி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் வேறு ஒரு அவதாரத்தை பார்ப்பீர்கள் என அனிருத் தெரிவித்துள்ளார். மதராஸி இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் SK இன்னைக்கு இந்த உயரத்துக்கு வளர்வதற்கு அவரின் தூய்மையான உள்ளமே காரணம் எனவும் அனிருத் நெகிழ்ந்துள்ளார். என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன் என கூறிய அவர் அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி சந்தோஷப்படுவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.