India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், கே.என்.நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமன மோசடியில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்களின் உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, உறுதி செய்த பட்டியல் உதவியாளர்களின் WhatsApp உரையாடலில் மீட்கப்பட்டதாகவும், ஹவாலா பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்திய ₹10 நோட்டின் படங்களை, WhatsApp-ல் பரிமாறி கொண்டதாகவும் ED கூறியுள்ளது.

மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபட மிளகு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அதில், 1 டம்ளர் தண்ணீர் & துளசியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனை வடிகட்டி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்தால், மிளகு கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேளைகளுக்கு கொடுக்கலாம். SHARE IT.

நடிகர் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். Time Travel கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் SK-வுக்கு ஜோடியாக ‘லோகா’ நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடி ஏற்கெனவே ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையான 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,949 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று (அக்.29) இதன் விலை ₹2000 உயர்ந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், நம்மூரிலும் இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் கொள்முதல் தொடர்பாக திமுகவை விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், விவசாயம் பற்றி தெரியாமல் புதுப்புது தலைவர்கள் எல்லாம் அறிக்கை விடுவதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் விஜய் எங்கு சென்றார் என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் கஷ்ட காலத்தில் களத்தில் நிற்பவரே சிறந்த தலைவர் எனவும் தெரிவித்தார். மக்களின் முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் கூறினார்.

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.

தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கரூர் மக்களை விஜய் சந்தித்தபோது, நட்சத்திர விடுதியின் உள்ளே நுழைய விடாததால், வெங்கட்ராமன் நீண்ட நேரமாக காரின் ஹாரனை ஒலிக்கவிட்டார். இது விஜய்க்கு தெரியவந்ததால், புதிய நிர்வாக குழு பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.

➤உங்களால் எல்லோரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது ➤உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள் ➤சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்களே காரணம் என நினைக்காதீர்கள். அவர்களின் சொந்த பிரச்னை காரணமாகவும், அப்படி நடந்துகொள்ளலாம். உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?
Sorry, no posts matched your criteria.