News August 23, 2025

வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

image

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 8, 2026

7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

image

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News March 8, 2026

டி20 WC பைனலில் முதல்முறையாக இந்தியர்கள்!

image

தற்போதைய இந்திய அணியில் உள்ள 6 வீரர்கள் முதல் முறையாக டி20 WC பைனலில் விளையாட இருக்கிறார்கள். அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா. ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர். ODI WC, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்ற போது டி20 பைனலில் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

News March 8, 2026

இந்திரா காந்தி பொன்மொழிகள்!

image

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

error: Content is protected !!