News August 3, 2024
நாயை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News July 5, 2025
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.
News July 5, 2025
இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் டார்கெட்

2-வது டெஸ்டில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது. 2-வது இன்னிங்சில் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். இதனால் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கை போல் அதிரடியாக இருந்தால் வெற்றி நமதே.
News July 5, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.