News August 3, 2024

நாயை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

image

மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News November 7, 2025

ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி: கிருஷ்ணசாமி

image

ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜன.7-ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும், அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

News November 7, 2025

பிரபல பாடகி சுலக்‌ஷனா மாரடைப்பால் உயிரிழப்பு

image

பழம்பெரும் பாடகி சுலக்‌ஷனா பண்டிட் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரில் 1954-ல் பிறந்த இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடியது மட்டுமில்லாமல், 25-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1967-ல் தக்தீர் படத்திற்காக லதா மங்கேஷ்கருடன் இணைந்து சுலக்‌ஷனா பாடிய பாடல் மிகப்பிரபலம். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகம், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP..

News November 7, 2025

விஜயகாந்த் செய்த தவறை செய்ய மாட்டேன்: சீமான்

image

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை, தான் நிச்சயம் செய்ய மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த், கூட்டணி வைத்த பிறகே அது குறைந்ததாக அவர் கூறியுள்ளார். அரசியலில் மாற்று என்று கூறிவிட்டு அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றம் ஏற்படாது என்றும், தனித்து நின்றே நாதக ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சீமான் பேசியுள்ளார்.

error: Content is protected !!