News August 3, 2024
நாயை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
நாமக்கல்: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !
News December 4, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹96,160-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால், நம்மூரிலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக விலை குறைந்துள்ளது.
News December 4, 2025
திணறும் இண்டிகோ: பயணிகள் அவதி!

விமான பணியாளர்களின் புதிய பணி நேர வரம்பு, ஏர்பஸ் A320 பிரச்னை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், நேற்று இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்தனர். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளது. நாளை (டிச.5) வரை மேலும் விமானங்கள் ரத்தாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


