News November 24, 2024
அணியுடன் சேர்ந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா

கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இன்று சேர்ந்து கொண்டார். தனக்கு இரண்டாவது குழந்தையை பிறந்திருப்பதையொட்டி மும்பையில் இருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். தற்போது அணியுடன் சேர்ந்திருக்கும் அவர், இரண்டாவது போட்டியில் இருந்து தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News July 8, 2025
கடலூர் பள்ளி வேன் விபத்து: ரயில்வே கேட் கீப்பர் கைது

கடலூரில் பள்ளி <<16987572>>வேன் மீது ரயில் மோதிய விபத்தில்<<>> அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
News July 8, 2025
சொந்த வீடு வாங்க முடியுமா? ஜோதிட விளக்கம்

சொந்த வீடு கட்டியோ அல்லது வாங்கியோ குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இது சிலருக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். அதற்கு அவர்களது சொந்த ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருப்பது தான் காரணம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகையால் செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதமிருந்து செவ்வாய்க்கு அதிபதி ஆன முருகனை வழிபட்டு வந்தால் 9 வாரத்தில் நல்லது நடக்கும் என்கிறார்கள்.
News July 8, 2025
இந்தியாவின் ஒட்டக படை தெரியுமா?

ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.