News March 18, 2024
வீட்டு மனை பட்டாவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது

ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News April 14, 2026
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? *தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். *சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். *சிறுநீரகம் செயலிழக்கலாம். *கற்கள் உண்டாகும். ஆகவே, இனிமேல் அடக்கி வைக்காதீங்க, தவிர்க்க முயற்சியுங்கள். SHARE IT
News April 14, 2026
தமிழக தேர்தல்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.
News April 14, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.16 உடன் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைகிறது. இதனிடையே, நாளை தேர்வு கிடையாது என்பதால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவர்கள் நாளை வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இன்றும் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.


