News March 18, 2024

வீட்டு மனை பட்டாவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது

image

ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

Similar News

News November 8, 2025

இந்த Android போன்கள் HACK ஆகும்..BIG ALERT!

image

Android version 13, 14, 15, 16 போன்களை வெச்சிருக்கீங்களா? உங்கள் மொபைலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால், அவை எளிதில் HACK ஆகலாம் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி, ரியல்மி, மோட்டோரோலா, விவோ, ஓப்போ, கூகுள் பிக்சல் என அனைத்து போன்களும் இந்த ரிஸ்க்கில் உள்ளன. எனவே உங்கள் போன் HACK ஆகாமல் இருக்க உடனடியாக Security Update செய்யுங்கள். முக்கியமான செய்தி, SHARE IT.

News November 8, 2025

பிரபல தமிழ் நடிகைக்கு 2வது கல்யாணம்

image

CSK அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை 2-வது திருமணம் செய்ய உள்ளதாக நடிகை சம்யுக்தா உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். அனிருதா ஸ்ரீகாந்த் – சம்யுக்தா இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

EPS முகத்திரை கிழிந்தது: ஆர்.எஸ்.பாரதி

image

பெண்கள் பாதுகாப்பு குறித்து EPS-ன் அற்பத்தனமான அரசியல் அம்பலமானது என்று ஆர்.எஸ்.பாரதி கட்டமாக விமர்சித்துள்ளார். கோவை விவகாரத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், எந்த வகையிலாவது திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் விஷமப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் EPS-ன் முகத்திரை கிழிந்துள்ளது எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!