News March 18, 2024

வீட்டு மனை பட்டாவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது

image

ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

Similar News

News October 14, 2025

BREAKING: இரவில் விஜய்யை சந்தித்தார்

image

கடந்த 15 நாள்களாக தலைமறைவாக இருந்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியே வந்தார். செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், N.ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாகினர். தற்போது, கரூர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல்குமார், இரவு விஜய்யை சந்தித்து 1 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.

News October 14, 2025

கோயிலுக்குச் செல்லும் பொழுது.. இத மறக்காதீங்க!

image

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.

News October 14, 2025

இன்று முதல் 4 நாள்களுக்கு சட்டசபை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள், கரூர் துயரத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை முதல் 2025-26-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!