News January 19, 2025
மதியம் சாப்பிட்ட பின் தூங்கலாமா?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று பழமொழி உள்ளது. இன்றைய தலைமுறையினர் பொதுவாக மதிய நேரம் மட்டுமே அதிக உணவு எடுத்துக் கொள்கின்றனர். இதனால், உண்டபின் அலுவலகங்களில் கூட சிலர் தூங்குவதை பார்த்திருப்போம். இத்தகைய தூக்கம் இயல்புதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிக உணவை செரிமானம் செய்ய உடலுக்கு ஓய்வு தேவைதான் என்றும் அதனாலேயே தூங்கும் உணர்வு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 5, 2026
ஃபைனலுக்கு முன்னேறுமா இந்திய அணி?

டி20 WC இரண்டாவது அரையிறுதியில், இன்று ENG Vs ING அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இந்தியா வலுவாக திகழ்ந்தாலும் அபிஷேக்கின் ஃபார்ம், மோசமான பீல்டிங் கவலையை தருகிறது. மறுபுறம், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சால்ட், புரூக்(C), வில் ஜாக்ஸ் & பந்துவீச்சில் அடில் ரஷித், ஆர்ச்சரை பெருமளவு நம்பியிருக்கிறது. வான்கடேவில் Dew-வின் தாக்கம் காரணமாக சேஸ் செய்வது நல்லது. யார் வெல்வார்கள்? உங்க கணிப்பு
News March 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 5, மாசி 21 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News March 5, 2026
கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


