News April 1, 2025
2 ரன்னில் பன்ட் அவுட்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல்லில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிராக ரன் எடுக்காமல் டக் அவுட்டும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 15 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, ரூ.27 கோடி வீண் என்று சமூகவலைதளத்தில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
ஆந்திராவில் ₹1.3 லட்சம் கோடியில் AI மையம்

விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட AI மையம் அமைக்க ஆந்திர அரசுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹1.3 லட்சம் கோடி) செலவில் அமையவுள்ள ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட AI மையம் 2029-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என PM மோடி தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
இந்தியாவின் டாப் 5 யூடியூபர்கள் சொத்து மதிப்பு இதுதான்

ஐடி கம்பெனி ஊழியர்களை காட்டிலும் தற்போது நாட்டில் யூடியூப்பில் சம்பாதிப்போரின் வருமானமே அதிகமாக உள்ளது. லட்சங்களில் தொடங்கி சில கோடிகள் வரை மாதம் சம்பாதிக்கும் பல யூடியூபர்கள் இந்தியாவில் உள்ளனர். யூடியூப் மூலம் கோடிகளை சம்பாதிக்க முடியுமா என நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் உள்ள டாப் 5 யூடியூபர்களின் சொத்து மதிப்பை பார்த்தால் நீங்களே வியந்துவிடுவீர்கள். மேலே போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்
News October 14, 2025
BREAKING: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, அக்.20 அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளையே வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.