News May 1, 2024
பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 20 ஆயிரம் 4ஜி டவர்களை அமைத்து, 4ஜி சேவைகளை முழு வீச்சில் வழங்க பிஎஸ்என்எல் ஆயத்தமாகி வருகிறது. மேலும் 3,500 டவர்களை அமைத்து பஞ்சாப், ஹரியானா ஹிமாச்சல் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் ஆரம்பகட்டமாக 4ஜி சேவை அளித்து வருகிறது. அங்கு அந்த சேவையை 8 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
அஜித் பவார் விபத்தில் மரணம்.. CM ஸ்டாலின் இரங்கல்

<<18980498>>விமான விபத்தில்<<>> மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்(DCM) அஜித் பவார்(66) உயிரிழந்தது வேதனையளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
செங்கோட்டையன் கதறி அழுதார்: KC பழனிசாமி

அரசியலில் தவெகவை இயங்கவிடாமல் செய்துவிட்டதால்தான் TTV அக்கட்சிக்கு செல்லவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். ஜனநாயகன், CBI விவகாரங்களால் விஜய் வெளியில் வரவில்லை என்ற அவர், KAS தவெகவை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் பேசியுள்ளார். மேலும், ஆதவுக்கு கீழ்தான் தன்னுடைய இடம் என்பது தெரியவந்ததால் KAS கதறி அழவே ஆரம்பித்துவிட்டார் எனவும், இதனால்தான் யாரும் தவெகவுக்கு செல்லவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
News January 28, 2026
இனி எல்லா சேவையும் ஈஸி.. வந்தாச்சு ஆதார் App!

இனி ஆதார் கார்டில் போன் நம்பரை அப்டேட் செய்ய, இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இன்று முதல் சேவைக்கு வந்துள்ள <


