News October 11, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தவெக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளில் அக்.13(திங்கள்) அன்று தீர்ப்பளிக்கப்படும் என SC அறிவித்துள்ளது. சிறப்புக் குழு விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வருமா?
Similar News
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM கிசான் 21-வது தவணை தொகை, இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில விவசாயிகளுக்கு அக்.18-ம் தேதி வாக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், விவசாயிகள் தீபாவளி கொண்டாட உதவும் வகையில் ₹2,000 தவணைத் தொகையை இன்னும் முன்கூட்டி (அடுத்த வாரம்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 11, 2025
இதயத்தை காக்க இதை செய்யுங்கள்

அலுவலகமோ, அபார்ட்மெண்ட்டோ மாடிப்படியை தவிர்த்து, லிப்ட் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு தான். தினசரி மாடிப் படிக்கட்டுகளில் ஏறுவது மாரடைப்பு ஆபத்தை 20% வரை குறைக்கிறதாம். துலேன் பல்கலை., 4,50,000 பேரிடம் நடத்திய ஆய்வின்படி, தினமும் குறைந்தது 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய, சுவாச ஃபிட்னஸ் & லிப்பிட் செயல்பாடுகளை மேம்படுத்தலாம். இதனால் மாரடைப்பு ஆபத்து குறையும். SHARE IT!
News October 11, 2025
தூக்க முடியாத மனிதன்.. இவரை தெரியுமா?

கனடிய-அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஜானி கூலன், தூக்க முடியாத மனிதனாக வலம் வந்துள்ளார். அவரது எடை வெறும் 55 கிலோ மட்டுமே. ஆனால், முகமது அலியால் கூட தூக்க முடியவில்லை. அவரை விட பெரிய உருவம் கொண்ட பலரும் அவரை தூக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளனர். ஜானி, தனது ரகசியத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இந்த தகவல் உங்களை ஆச்சரியப்பட வைத்ததா? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.