News October 11, 2025

BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்

image

Ex அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிணைப்பு விவகாரத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு OPS, TTV, சசிகலா ஆகியோரை சந்திப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த சந்திப்பும் நடக்கவில்லை. தலைமைக்கு சவால் விடுத்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில், நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்களை அறிய ஆலோசனை நடத்த உள்ளாராம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News December 8, 2025

செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

image

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.

News December 8, 2025

அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்திருக்கிறீர்களா?

image

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.

News December 8, 2025

இரவில் சந்தித்தார் ஓபிஎஸ்.. மீண்டும் கூட்டணியா?

image

கோவையில் நேற்று இரவு அண்ணாமலை – OPS சந்தித்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்புக்குழு நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால், NDA கூட்டணியில் மீண்டும் OPS இணைய வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!