News October 11, 2025

BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்

image

Ex அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிணைப்பு விவகாரத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு OPS, TTV, சசிகலா ஆகியோரை சந்திப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த சந்திப்பும் நடக்கவில்லை. தலைமைக்கு சவால் விடுத்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில், நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்களை அறிய ஆலோசனை நடத்த உள்ளாராம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 11, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிச.15 முதல் அவர்களுக்கும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (நவ.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால், தகுதியான மகளிர் உடனடியாக முந்துங்க. SHARE IT

News November 11, 2025

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.

News November 11, 2025

பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

error: Content is protected !!