News October 20, 2025

BREAKING: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

image

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 14,420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், விநாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வரத்து இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News March 24, 2026

FLASH: கோவைக்கு அறிவித்தார் இபிஎஸ்!

image

2026 தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவைக்கு மெட்ரோ ரயில், சர்வதேச கிரிக்கெட் மைதானம், வெள்ளலூர் பேருந்து முனையம் ஆகியவை அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவிநாசி மற்றும் திருச்சி சாலைகளில் புதிய மேம்பாலங்கள், மேற்குப் புறவழிச்சாலை மற்றும் நாராயணசாமி நாயுடு நினைவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளது.

News March 24, 2026

PM மோடி – டிரம்ப் முக்கிய ஆலோசனை

image

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல் பற்றி அதிபர் டிரம்ப், PM மோடி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு ஹார்முஸ் நீரிணை திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேற்காசியாவில் அமைதி நிலவுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என டிரம்ப்பிடம் உறுதியளித்தாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார்.

News March 24, 2026

வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

image

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.

error: Content is protected !!