News April 12, 2024
BREAKING: மழை பெய்கிறது

திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெப்பம் தணியும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Similar News
News August 12, 2025
ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
புதிய பாதையில் இந்திய கிரிக்கெட் அணி!

நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.
News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.