News September 30, 2025

BREAKING: கட்சி பதவியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

image

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களின் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 பேரை பதவியில் இருந்து EPS நீக்கியுள்ளார்.

Similar News

News September 30, 2025

சென்னை: 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு EMAIL மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ரஷ்ய நாட்டு தூதரகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

மக்களிடம் நடந்தது குறித்து கேட்க உள்ளோம்: MPக்கள் குழு

image

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய ஹேமமாலினி MP தலைமையில் ஒரு குழுவை பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த குழு இன்று தமிழகத்துக்கு வந்தடைந்துள்ளது. கரூரில் அன்று உண்மையாகவே நடந்தது என்ன என்பது குறித்தும் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்க உள்ளதாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 30, 2025

தவெக எந்த தவறும் செய்யவில்லை: N.ஆனந்த்

image

கரூர் விவகாரத்தில் தவெக எந்த தவறும் செய்யவில்லை என மதுரை HC-ல் ஜாமீன் கோரி N.ஆனந்த் மனு அளித்துள்ளார். அதில், கூட்டத்திற்கு குழந்தைகள், பெண்கள் வரவேண்டாம் என முன்கூட்டியே கூறியதாகவும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை கடமை தவறிவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் பொறுப்பேற்க முன்வரவில்லை என கண்டனங்கள் வலுக்கும் நிலையில், தங்களுடைய தவறு எதுவும் இல்லை என தவெக கூறியிருக்கிறது.

error: Content is protected !!