News April 24, 2025

BREAKING: 3 நக்சல்கள் என்கவுன்ட்டர்

image

சத்தீஸ்கரில் 3 நக்சல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது.

Similar News

News April 24, 2025

யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு கம்பராமாயணம் பரிசு

image

யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, கிண்டி ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கேடர்களுக்கு சால்வை அணிவித்த அவர், கம்பராமாயணம் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும், புத்தகம் வாசித்துக்கொண்டே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 24, 2025

கற்பனையில் நினைக்காத வகையில் பதிலடி: PM மோடி

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என PM மோடி எச்சரித்துள்ளார். பிஹாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறினார்.

News April 24, 2025

இந்த நேரத்தில் தயவு செய்து போனை யூஸ் பண்ணாதீங்க!

image

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மர் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.

error: Content is protected !!