News August 19, 2025

BREAKING: விழுப்புரம் அருகே கொடூர கொலை

image

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் குமரன். அதே பகுதியில் ஜான்சன் நாய் பண்ணை வைத்துள்ளார். இன்று மாலை இருவருக்கும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஜான்சன் பிரியாணி கிண்டும் பெரிய கரண்டியால் குமரனை தாக்கியுள்ளார். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகள் பொம்மி(18). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பெண்ணின் தந்தை வீரப்பன் அளித்த புகாரின் பேரில், அவரின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? என போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

விழுப்புரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(42). பெயிண்டரான இவரது சகோதரி வேல்விழி, தம்பி வேலு ஆகியோர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 12, 2026

விழுப்புரத்தில் பரிதாப பலி!

image

சேலத்தைச் சேர்ந்தவர் ஹரி(48). இவர், 5 ஆண்டுகளாக விழுப்புரத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். உடல் நல பாதிப்பால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று நகராட்சி மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!