News January 5, 2026
BREAKING: பொங்கல் பரிசு பணம்.. அரசு புதிய அறிவிப்பு

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹3,000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ₹6,687 கோடியை ஒதுக்கி தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. SHARE IT.
Similar News
News January 25, 2026
பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. ஊர்களுக்கு சென்றவர்கள் நெரிசலின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக TN அரசு நாளை சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கவுள்ளது. அதாவது, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 பஸ்களும், மற்ற நகரங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNSTC APP மற்றும் இணையதளத்தில் இப்போதே டிக்கெட்களை புக் செய்யுங்க!
News January 25, 2026
EPS-க்கு துரோகத்திற்கான நோபல் பரிசு: உதயநிதி

திருவொற்றியூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது EPS-க்கு தான் கொடுக்க வேண்டும் என சாடியுள்ளார். மேலும் அமித்ஷாவின் முரட்டு அடிமை EPS தான் எனவும், ஹிந்தி திணிப்பு குறித்து அவரிடம் கேட்டால், ஹிந்தியை திணித்தால் என்ன என்று கேட்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 25, 2026
படுக்கையறையை பராமரியுங்கள்… மகிழ்ச்சி கூடும்

வரவேற்பறை மற்றும் வீட்டின் பிற அறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படுக்கையறைக்கு நாம் கொடுப்பதில்லை. இதனால் தூக்கத்தின் தரம் கெடுகிறது, மன அழுத்தம் அதிகரிக்கிறது, பல நோய்களும் கூட ஏற்பட காரணமாகிறது. படுக்கை அறையை சரியாக பராமரித்தால், உங்கள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கூட மேம்படும் என்கின்றனர் மனநல டாக்டர்கள்.


