News February 2, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

தேமுதிகவை மதித்து எந்த கூட்டணியில் அதிக இடம் வழங்குகிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாளை(பிப்.3) கூட்டணி முடிவை தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.
Similar News
News February 4, 2026
டெல்லியிலிருந்து தேமுதிகவுக்கு அழைப்பு: பிரேமலதா

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தோழமை கட்சிகள் தான் என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜன.26-ல் நடந்த குடியரசுத் தின விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தேர்தல் பிரசாரம் காரணமாக போக முடியவில்லை என்றார். மேலும், கட்சியின் எதிர்காலம் கருதியே எங்கள் கூட்டணி இருக்கும் என்றும், அதற்காக ஒருவரிடம் பேசினாலே அது கூட்டணி ஆகிவிடாது எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
‘அப்பா நாங்க 3 பேரும் சாகப் போகிறோம்’

குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காவிட்டால் பெற்றோருக்கு ஏற்படும் பேரிழப்பை உ.பி.,யின் காசியாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொரோனா காலத்தில் செல்போனில் கொரியன் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது பிள்ளைகளை தந்தை சேதன் குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பாக்கி(12), பிராச்சி(14), விஷிகா(16) மூவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
News February 4, 2026
சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்: EPS

EPS தலைமையை ஏற்று, NDA-வில் இணைந்த TTV, சசிகலாவும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என கூறியிருந்தார். இதனால், சசிகலா விஷயத்தில் EPS என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் துரத்தி விடப்பட்டவர்கள்; சசிகலா குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி யூகங்களுக்கு EPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


