News January 30, 2026
BREAKING: ஆத்தூரில் தாய், மகள் தற்கொலை

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். லட்சுமிக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 5 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3-வது மகள் தீபவேணிக்கு திருமணம் ஆகாதது மற்றும் கடன் தொல்லை அதிகரித்தது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News February 2, 2026
சேலம்: ரூ. 1 லட்சம் சம்பளத்தில்.. வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க<
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 2, 2026
BREAKING: சேலம் தவெக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு

தெடாவூரில் பழனிமுருகன் என்பவர் மாட்டை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மாடு மோதியுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அஜய், தவெக நகர செயலாளர் அருணை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அருண் பழனி முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 2, 2026
சேலம்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


