News August 25, 2024
உடல் உஷ்ணமா? டிப்ஸ் இதோ

*காலை எழுந்தவுடன் சிறிது வெந்தயத்தை உண்டு தண்ணீர் பருகலாம். இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரையும் காலையில் அருந்தலாம்.
*அதிகாலை நீராடுவதால், உடல்சூடு பறந்தோடும்
*காலை எழுந்ததும் சிறிது, சிறிதாக 1 லிட்டர் நீர் குடிப்பதும் உடல் சூட்டை கட்டுக்குள் வைக்கும்.
*காலை நேரத்தில் கற்றாழை சாப்பிட்டுவர நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
*காலை வேளையில் இதமான வெளிக்காற்றை சுவாசிப்பது நலம் தரும்.
Similar News
News April 10, 2026
ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
News April 10, 2026
பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.
News April 10, 2026
மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.


