News August 25, 2024
உடல் உஷ்ணமா? டிப்ஸ் இதோ

*காலை எழுந்தவுடன் சிறிது வெந்தயத்தை உண்டு தண்ணீர் பருகலாம். இரவில் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரையும் காலையில் அருந்தலாம்.
*அதிகாலை நீராடுவதால், உடல்சூடு பறந்தோடும்
*காலை எழுந்ததும் சிறிது, சிறிதாக 1 லிட்டர் நீர் குடிப்பதும் உடல் சூட்டை கட்டுக்குள் வைக்கும்.
*காலை நேரத்தில் கற்றாழை சாப்பிட்டுவர நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
*காலை வேளையில் இதமான வெளிக்காற்றை சுவாசிப்பது நலம் தரும்.
Similar News
News November 23, 2025
சண்டிகர் யாருக்கு சொந்தம்? விளக்கம்

பஞ்சாப், ஹரியானாவின் பொதுவான தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், புதுச்சேரி உள்ளிட்ட பிற யூனியன் பிரதேசங்களை போல சண்டிகரையும் மாற்ற, மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை, பஞ்சாப் பாஜக, AAP உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
News November 23, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. 19 வயது பையன் சிக்கினான்

திருச்சியில் <<18313662>>பள்ளி மாணவி கர்ப்பமான<<>> செய்தி அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே நடந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், 19 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். விஷயம் வெளியே தெரிந்ததை அடுத்து, இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News November 23, 2025
சபரிமலை தங்கம் திருட்டு: இந்த நடிகர் சாட்சியா?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, <<18345270>>பத்மகுமார் <<>>உள்பட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உன்னிகிருஷ்ணன் நடத்திய ஒரு சடங்கில் அவர் கலந்துகொண்டதே இதற்கு காரணம். ஜெயராமின் வாக்குமூலத்தை பதிவு செய்ய SIT திட்டமிட்டுள்ளது.


