News August 7, 2025
பந்து சேதம்? இந்திய வீரர்கள் மீது Ex பாக்., பவுலர் புகார்

IND VS ENG இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பந்தின் பளபளப்புக்காக வாஸ்லின் தடவி இருக்கலாம் என Ex பாக்., பவுலர் ஷபீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். 80 ஓவர்கள் முடிந்த பின்பும் பந்து பளபளப்பாக இருந்ததாக கூறிய அவர், அந்த பந்துகளை ஐசிசி பரிசோதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 10, 2026
ட்ரோன் பிசினஸில் களமிறங்கும் டிரம்ப் மகன்கள்

ஈரானுடன் போர் நடக்கும் சூழலில் டிரம்ப்பின் மகன்கள் எரிக் & டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ட்ரோன் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆட்டோனமஸ் டிரோன்கள் தயாரிக்கும் Powerus நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். போர் தீவிரமடைந்து டிரோன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது. போர் நடைபெறும் நேரத்தில் டிரம்ப் மகன்கள் ஆயுத வியாபாரத்தில் நுழைந்துள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
News March 10, 2026
சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்ட செடி!

சர்க்கரை சாப்பிட ஆசை இருந்தும், நீரிழிவு நோய் வந்துவிடும் என் பயமா? இச்செய்தி உங்களுக்கே! பேக்டரிகளில் தயாரிக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசி (Stevia) செடி உள்ளது. சர்க்கரையை விட 150- 300 மடங்கு இனிப்பு கொண்ட இதன் இலைகளில் கலோரிகளும் குறைவாம். பிரேசில், உருகுவே நாடுகளில் தோன்றிய இச்செடியை, சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட அளவிற்கு உட்கொள்ளலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News March 10, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


