News August 7, 2025
பந்து சேதம்? இந்திய வீரர்கள் மீது Ex பாக்., பவுலர் புகார்

IND VS ENG இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பந்தின் பளபளப்புக்காக வாஸ்லின் தடவி இருக்கலாம் என Ex பாக்., பவுலர் ஷபீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். 80 ஓவர்கள் முடிந்த பின்பும் பந்து பளபளப்பாக இருந்ததாக கூறிய அவர், அந்த பந்துகளை ஐசிசி பரிசோதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.
News November 8, 2025
BREAKING: வீடியோவை கொடுத்தார் விஜய்!

கரூர் பிரசாரத்தின் போது விஜய் பயணித்த பஸ்ஸின் சிசிடிவி காட்சிகளை தான்தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பிரசார பஸ் சிசிடிவி காட்சிகளை 3 நாள்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரியிருந்தது. இந்நிலையில், அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தவெக அலுவலகத்தின் உதவியாளர் குரு, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
News November 8, 2025
ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் முதல் இந்திய படம்!

ஆஸ்கர் வழங்கும் அகாடமி அமைப்பு, சினிமா துறைக்கென உருவாக்கிய மியூசியம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியம். இங்கு இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்பட்டது இல்லை. ஆனால், இந்த குறையை நீக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘பிரமயுகம்’. ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.


