News April 17, 2024
தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்கும் பாலகிருஷ்ணா!

தெலுங்கு திரையுலகின் ரசிகர்களால் காட் ஆஃப் மாஸ் என்றழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்டிமென்ட் ஆக்ஷன் பாணியிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த அவர் தனது பார்வையை கோடம்பாக்கத்தின் இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதைக் களத்தில் நடிக்க அவருக்கு ஆசை இருப்பதாகக் கூறியுள்ளாராம்.
Similar News
News August 15, 2025
அப்பா மன்னித்து விடுங்கள்.. உருக்கமான தற்கொலை கடிதம்

அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 15, 2025
சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்வதா? ஓவைசி காட்டம்

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்ந்ததன் மூலம், PM மோடி விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக ஐதராபாத் MP ஓவைசி விமர்சித்துள்ளார். விடுதலை போராட்டத்தில் RSS எந்த பங்களிப்பையும் செய்யவில்லை எனவும், ஆங்கிலேயர்களுக்கு RSS சேவகம் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சீனாவை விட சங் பரிவாரங்களின் வெறுப்பும், பிரித்தாளும் கொள்கையும் தான் நமது மிகப்பெரிய எதிரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
ஆரவாரத்துடன் வெளியான வார் 2வுக்கு பெரும் அடி

ரஜினியின் கூலியுடன் களமிறங்கிய ‘வார் – 2’ படம் முதல் நாளில் ₹52.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ அதன் முதல் பாக வசூலைக்(₹53 கோடி) கூட தொடவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதேவேளையில், ரஜினியின் <<17409522>>‘கூலி’, ₹140 கோடி<<>> வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.