News November 29, 2024

அலற வைக்கும் ரயில் சைக்கோவின் பின்னணி (1/2)

image

குஜராத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் கரம்வீரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிட வைத்துள்ளது. தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ரயில் நிலையங்களில் இதுவரை 5 பேரை அவர் கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். அனைவரும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.

Similar News

News December 7, 2025

₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: CM

image

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அவர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை என்று தெரிவித்த CM, நாட்டிலேயே பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.

News December 7, 2025

தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவது அவசியம்: வந்தது எச்சரிக்கை

image

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓரிடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 6 வயது முதல் பெரியவர்கள் வரை ப்ளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது. பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.

News December 7, 2025

அன்புமணி பாமக தலைவர் இல்லையா? ராமதாஸ் தரப்பு

image

அன்புமணியை தலைவர் என அறிவித்து ECI அனுப்பிய கடிதங்கள் செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவே அனுமானிக்க வேண்டும். இதனால் தற்போது, பாமகவுக்கு தலைவர் யாரும் இல்லாததால், நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தலைவராகலாம் என்றும், ராமதாஸ் தலைவர் என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!