India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. பெண்கள் அணியும் ‘பிரா’வும் இதில் விதிவிலக்கல்ல. சுமார் 64% பிரா பிராண்டுகளில், ஆபத்தான கெமிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரா, உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது ‘ரசாவதி’ திரைப்படம். இப்படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தாஸுக்கும், சிறந்த ஒலி அமைப்புக்காகவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கெனவே விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பிரான்சில் நடைபெற்ற NICE சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணன் இளவரசு மற்றும் சிவாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட <<17350655>>பட்டாசு விபத்தில் 3 பேர்<<>> உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கோர விபத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். துயரகரமான செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர் குடும்பத்துக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உங்களிடம் எப்போதும் நெகடிவ் விஷயங்களையே பேசி, அவநம்பிக்கை மட்டுமே விதைத்து வருபவர் தான் டாக்சிக் நண்பர். அவர், *எப்போதும் உங்களை மட்டம் தட்டுவார். *உங்களுடைய மைனஸை மட்டுமே சுட்டிக்காட்டி, பெரிது படுத்துவார். *எதையும் நெகடிவாக அணுகுவார். *தன்னைப் பற்றியே அதிகம் பேசுவார். *எப்போதும் புறணி, கிசுகிசு பேசுவார். *உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, மாற்ற முயல்வார். இப்படியான நண்பர் உங்களுக்கு இருக்கிறாரா?
டாக்சிக் நண்பரை அடையாளம் கண்டபின் *அவர்களுக்கான லிமிட்டை முடிவு செய்யுங்கள் *உங்களை பாதிக்கும் நட்பை முறித்துக்கொள்ள உங்களுக்கு எப்போதும் உரிமை உள்ளது. ஆகவே, எல்லை மீறினால் விலகத் தயங்காதீர் *எதையும் நேருக்கு நேர் சொல்லி விடுங்கள் *உங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் *மீண்டும் அவருடன் தொடர்பை புதுப்பிக்க விரும்பினால், ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள் *புதிய நண்பர்களை கண்டறிந்து பழகுங்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் NDA கூட்டணியிலிருந்து OPS விலகினார். இதனை தொடர்ந்து நெல்லைக்கு சென்ற EPS-யிடம் OPS இணைப்பு குறித்து நயினார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஸை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.