India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்கொலை செய்வது போல நாள்தோறும் கனவு வந்ததை தாங்க முடியாத 12ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி, பல நாட்களாக இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். இது குறித்து கடிதம் எழுதியுள்ள அவர், அடிக்கடி வரும் கனவால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ‘3’ படத்தில் வருவது போல தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
போதைப் பொருட்களின் தலைமை இடமாக குஜராத் உள்ளதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்கள் இந்தியா முழுவதும் குஜராத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வாய்ப்பே இல்லை. எனவே, மத்திய பாஜக அரசு குஜராத்தில் தீவிரம் காட்டி போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என அவர் கூறினார்.
பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டுவிட்டதாக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இதன் பிறகு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கடைசி வரை தனிமையான வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.
பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகள், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து X பக்கத்தில், வாழ்க்கை மிகவும் கடினமானது என தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறியதற்கு, அப்படி நடக்காது என நினைப்பதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேல்ஸ் நாட்டில் 3 வயது சிறுமி கண்ணாடி துகள்கள், மரத்துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி, கடந்த சில மாதங்களாக கற்கள், பஞ்சு உள்ளிட்ட கையில் கிடைத்ததை எல்லாம் விழுங்கியுள்ளார். எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார். உலகிலேயே மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 6 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். இந்த நிலையில், 5ஆவது முறையாக போட்டியிட்ட புதின், அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடினார். இதனிடையே, ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வான புதினுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவை நாதக தலைவர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “PM SHRI பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்த ஒத்துக்கொண்ட திமுக அரசு தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி, மாநிலக் கல்வியைக் காவி மயமாக்குவதுதான் திராவிட மாடலா” என்றார்.
நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க புதிய மின்வாகன கொள்கை பெரிதும் உதவும் என்று மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புதிய மின்வாகன கொள்கை, உயர் விலை கார்கள் & ஆடம்பர வாகனங்களுக்கானது. எனவே, இது உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.