India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
யார் என்ன மொழி பேச வேண்டும் என ஆட்சியாளர்கள் முடிவு செய்ய முடியாது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இந்தியை படிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். எனக்கு இந்தி தெரியும், ஆனால், கட்டாயப்படுத்தி பேசுங்கள் என்பதை ஏற்க மாட்டேன் எனக் கூறினார். மொழி, உணவு, உடை, கல்வியை அடுத்தவர்கள் மீது திணிப்பது நல்ல ஜனநாயகம் இல்லை. அதை நம்மை ஆளுகிற செய்தாலும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை – கொல்கத்தா இடையேயான 22ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே பெறாத கொல்கத்தா உடன் மோதுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மீண்டும் பாசிச பாஜக வெற்றி பெற்று விடுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது என்றும் மதச்சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்தார். அத்துடன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நவக்கிரக பரிகார திருத்தலங்களில் திருமங்கலக்குடி ஆலயம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் திருமங்கலக்குடி. இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக பிராணவரதேஸ்வரரும், அம்பாளாக மங்கள நாயகியும் அருள் புரிகிறார்கள். திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் சிலாகித்து பாடப்பட்டிருக்கும் புண்ணிய பூமியாக இந்த ஆலயம் உள்ளது.
➤ மோடி மீண்டும் வெற்றி பெறுவது பாஜகவுக்கே ஆபத்து – முதல்வர் ஸ்டாலின்
➤ தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் – ஜே.பி.நட்டா
➤ எல்.முருகனை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் – ஆ.ராசா
➤ பாஜகவை நெஞ்சுரத்தோடு முதல்வர் எதிர்க்கிறார் – திருமாவளவன்
➤ எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது – விஜய் ஆண்டனி
➤ ஹாய் நான்னா படத்துக்கு சர்வதேச விருது
➤ குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி
விபத்தில் இருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். முகத்தில் தற்போது கூட ஐந்தாறு பிளேட் இருக்கிறது. நான் பேசுவதை நன்றாக கவனித்தால் ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு சிரமப்படுவதைப் பார்க்கலாம் என்ற அவர், விபத்தில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து தற்போது பாசிட்டிவாக இருப்பதாக கூறினார். மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது அவர் விபத்தில் சிக்கினார்.
இந்தியாவிற்கு ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு மக்கள் மணிப்பூரில் ரத்தக் கண்ணீர் வடித்த போது அங்கு செல்லாத மோடி, தமிழக வெள்ளத்தை பார்வையிட வராத அவர், வாக்கு கேட்க மட்டும் வருகிறார் எனக் குற்றம்சாட்டிய அவர், ஹிட்லர், முசோலினியால் கூட சிந்திக்க முடியாத அவலங்களை தனக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி செய்வதாக விமர்சித்தார்.
விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். அதன் மூலம் உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும். அதே போன்று எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுக்காமல், கட்டுப்போட்டுக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூரின் பந்துவீச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 164 என்ற இலக்கை, குஜராத் அணி தொட முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் யாஷ் தாக்கூர். கில், விஜய் சங்கர் என குஜராத்தின் முக்கிய விக்கெட்டுக்களை இவர் வேட்டையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஏப்ரல் – 08 | பங்குனி – 26
▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 09:30 AM – 10:30 AM,
7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 7:30 AM- 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:30 PM
▶குளிகை: 01:30 AM – 03:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி – அமாவாசை
Sorry, no posts matched your criteria.