News April 8, 2024
திருமங்கலக்குடி பரிகார ஆலயத்தின் சிறப்பம்சம்

நவக்கிரக பரிகார திருத்தலங்களில் திருமங்கலக்குடி ஆலயம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் திருமங்கலக்குடி. இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக பிராணவரதேஸ்வரரும், அம்பாளாக மங்கள நாயகியும் அருள் புரிகிறார்கள். திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் சிலாகித்து பாடப்பட்டிருக்கும் புண்ணிய பூமியாக இந்த ஆலயம் உள்ளது.
Similar News
News December 8, 2025
தெலுங்கு நடிகருடன் மீனாட்சி சௌத்ரி காதலா?

GOAT-ல் விஜய்யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தெலுங்கில் நடிக்க தொடங்கியதில் இருந்து இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வருவதாகவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
INTERNET வேண்டாம்.. மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்

இனி இண்டெர்நெட் இல்லாமலும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என NPCI தெரிவித்துள்ளது. உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து, ‘*99#’ என்பதற்கு டயல் செய்யவும். கேட்கும் விவரங்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து, அக்கவுண்ட்டை ஆஃப்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பின், மீண்டும் ‘*99#’ என்பதற்கு டயல் செய்து, தேவைப்படும் நபருக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5,000 வரை அனுப்பலாம்.
News December 8, 2025
ED கடிதம் கிடைத்தது எப்படி? CBCID-க்கு மாற்றிய TN அரசு

நகராட்சி நிர்வாக துறையில் அரசுப் பணி வழங்கியதில் ₹250 கோடி முறைகேடு நடந்துள்ளது பற்றி தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ED கடிதம் எழுதியதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, ED எழுதியதாக கூறப்படும் கடிதம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பியது. இதனை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், விசாரணை CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.


