News March 18, 2024

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்

image

மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. அவை, 1. வடசென்னை 2. தென்சென்னை 3. மத்திய சென்னை 4. ஸ்ரீபெரும்புதூர் 5. காஞ்சிபுரம் (தனி) 6. அரக்கோணம் 7. வேலூர் 8. தருமபுரி 9. திருவண்ணாமலை 10. கள்ளக்குறிச்சி 11. சேலம் 12. நீலகிரி (தனி) 13. தஞ்சாவூர் 14. தூத்துக்குடி 15. தென்காசி (தனி) 16. தேனி 17. ஆரணி 18. கோவை 19. பொள்ளாச்சி 20. ஈரோடு 21. பெரம்பலூர் ஆகும்.

News March 18, 2024

திருச்சியில் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்

image

திருச்சியில் 23ம் தேதி முதல் இபிஎஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமகவை கொண்டுவரும் முயற்சி பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், எப்படியாவது 23ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப்பங்கீட்டை முடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

News March 18, 2024

மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு

image

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் திமுக ஒதுக்கியது. இதனால், விரும்பிய தொகுதியை வழங்க வேண்டும் என மதிமுக பிடிவாதமாக கூறியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு நிறைவு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியே இறுதி செய்யாத நிலையில், திமுக தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக – 21, காங்., – 10, விசிக – 2, சிபிஎம் – 2, சிபிஐ – 2, மதிமுக – 1, ஐயூஎம்எல் – 1, கொமதேக -1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

News March 18, 2024

BREAKING: 2 இடங்களில் திமுக போட்டியிடவில்லை

image

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கார்த்தி, கரூரில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர் களமிறங்க வாய்ப்புள்ளது.

News March 18, 2024

தொகுதி பங்கீட்டு குழுவுடன் இபிஎஸ் ஆலோசனை

image

தேமுதிக, பாமக உடனான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நடக்கும் இந்த ஆலோசனையில், தேமுதிக, பாமக கேட்கும் தொகுதிகளை கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. எப்படியாவது அக்கட்சிளுடனான கூட்டணியை தக்க வைத்தே ஆக வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் கூறுப்படுகிறது.

News March 18, 2024

இரட்டை இலை சின்னத்தை முடக்கும் ஓபிஎஸ் அணி?

image

தமிழகத்தில் ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இபிஎஸ் வசமே கொடி, சின்னம் உள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிட உள்ளதாக ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக கூறுகிறது. இதுதொடர்பான வழக்கில் இன்று இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சின்னத்தை முடக்கும் பணியில் ஓபிஎஸ் அணி ஈடுபடும் எனத் தெரிகிறது.

News March 18, 2024

திமுக கூட்டணியில் 10 தொகுதியில் காங்., போட்டி

image

நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 9+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 1. திருவள்ளூர் (தனி) 2. கடலூர் 3. மயிலாடுதுறை 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. கிருஷ்ணகிரி 7. கரூர் 8. விருதுநகர் 9. குமரி 10. புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

RCB வெற்றி, நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு சமர்ப்பணம்

image

2024 WPL தொடரை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, நேற்று மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளில் (மார்ச் 17), RCB அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாக RCB ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் RCB வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News March 18, 2024

அவசர வழக்காக விசாரணை

image

பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக, இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

error: Content is protected !!