India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 10% வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும். அதேநேரம், மிகப்பெரிய வாக்கு வங்கி வைத்திருக்கும் அதிமுகவும் பாமகவும் இணைந்தால், வட தமிழகம் & கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெறும்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்தில், மொத்தம் 15-க்கும் மேற்பட்ட சண்டைக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமா கதைக்களத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாம் CS இசையமைக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோஹித் ஷர்மாவுடன் இதுவரை பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” என் வாழ்நாளில் பெரும் பகுதி ரோஹித் தலைமையின் கீழ் விளையாடி உள்ளேன். அவரின் அனுபவம் மும்பை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரோடு இணைந்து பணியாற்ற எனக்கு எவ்வித சிரமமும் இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றி கோப்பையை வெல்வதே நோக்கம்” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று சாலைப் பேரணியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வரும் அவர், சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பேரணியாக செல்கிறார். வழி நெடுகிலும் அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள் பூக்களுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம், எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் #GoBackModi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸூக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1) குமரி- விஜய் வசந்த், 2) விருதுநகர்- மாணிக்கம் தாகூர், 3) சிவகங்கை – கார்த்திக், 4) கரூர் – ஜோதிமணி, 5) திருவள்ளுர்- சசிகாந்த் & விஸ்வநாதன், 6) மயிலாடுதுறை- பிரவின் சக்ரவர்த்தி , 7) கிருஷ்ணகிரி – செல்லகுமார், 8) கடலூர்- அழகிரி, 9) நெல்லை- பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
2012 இதே நாளில் நடந்த சச்சினின் கடைசி ஒருநாள் போட்டியை நம் யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சச்சின் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் அவரது ஒருநாள் பயணம் முடிவடைந்தது. அந்தப் போட்டியில், கோலி 183* ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, பேரா. தீரன், வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டணி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், CPI-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஏற்கெனவே திருப்பூர் MP-யாக உள்ள கே.சுப்பராயன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, நாகை தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் நாகை வேட்பாளராக மா.செல்வராசு போட்டியிட்டார்.
Sorry, no posts matched your criteria.