India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று முறையும், மக்களவைத் தேர்தலில் 2009, 2019 என இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் (மார்ச் 22) நிறைவடைகிறது. தேர்வுகள் எளிமையாக இருந்ததால் பலர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 4 தொகுதிகளில் திமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. கோவை – அண்ணாமலை vs கணபதி ராஜ்குமார், தென் சென்னை – தமிழிசை vs தமிழச்சி தங்கப்பாண்டியன், நீலகிரி – எல்.முருகன் vs ஆ.ராசா, மத்திய சென்னை – வினோஜ் செல்வம் vs தயாநிதி மாறன்.
தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி – 1, ஜான் பாண்டியன் – 1, தேவநாதன் – 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை – அண்ணாமலை, நீலகிரி – எல்.முருகன், தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன், நெல்லை – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி – நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல பெரம்பலூர் – பாரிவேந்தர், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முட்டை தோசையை விரும்பி உண்பார் என லீலா பேலஸ் சமையல் கலைஞர் நகுல் புராணிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தோனி சென்னை வரும் போதெல்லாம் இங்கு அடிக்கடி உணவருந்துவார். குறிப்பாக, தோசையை விரும்பி சாப்பிடுவார். முட்டை தோசை என்றால் ரசித்து சாப்பிடுவார். தனக்கு எப்படிபட்ட தோசை வேண்டும் என்பதையும் சில நேரம் முன்கூட்டியே சொல்லிவிடுவார்” என்றார்.
ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. “கோடையில் ஃபிரிட்ஜில் வைத்த நீரை அருந்துவது கொழுப்புகள் கரைவதை தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு ரத்த நாளங்களையும் சுருக்கும். அத்துடன் செரிமான உறுப்புகள், ஊட்டச்சத்துகளை சுவீகரிக்கும் ஆற்றலையும் பாதிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இயக்குநர் ராஜமௌலி சிக்கியதாக அவரது மகன் கார்த்திகேயா X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28ஆவது மாடியில் இருந்த போது, தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம்” என தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை வந்த குறுஞ்செய்தியை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் இரு பிரிவினருக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்க வேண்டும். தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர் ரவிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி, உடனடியாக பதவி விலக வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். பொன்முடி வழக்கில், நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பொன்முடிக்கு இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.