India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை பார்க்க அனைவரும் காத்திருப்பதாக குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா கூறியுள்ளார். குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்ட்யா மும்பை அணிக்கு சென்ற நிலையில், கில் குஜராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கில் குறித்து பேசிய நெஹ்ரா, கில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். கேப்டனாக செயல்படுவது அவரது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ₹50,000 வரைதான் ரொக்கப் பணம் கொண்டு செல்ல முடியும். ₹50,000க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவர்.
தேர்தல் நெருங்கி விட்டதால், கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியினர் நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
2007 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோகமான ஒன்றாகும். இதில் லீக் சுற்றிலேயே தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதில் மார்ச் 17இல் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக கங்குலி 66, யுவராஜ் 47 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நற்செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது. நம் நாட்டில் தங்கம் இறக்குமதிக்கு 15% வரி செலுத்த வேண்டும். மத்திய அரசின் சமீபத்திய முடிவால், இனி வரிச்சுமை குறையும்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 – 32 வயதுடையவர்கள், https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சென்னையில் உள்ள DGP அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உ.பி, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், ம.பி மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட ம.பிக்கு 6 தொகுதிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) ₹108க்கு விற்பனையாகிறது. அதேபோல், எலும்புகள் இல்லாத கோழி கறி ஒரு கிலோ ரூ.210, கறி கோழி ஒருகிலோ ரூ.160, கோழி கல்லீரல் ஒருகிலோ ரூ.120, நாட்டுக் கோழி கறி ஒரு கிலோ ரூ.360, தோல் இல்லாத கோழி கறி ரூ.200க்கு விற்பனையாகிறது.
ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். ‘என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை. எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகி விட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்? என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2010இல் சாம்ராட் தஹல் என்பவரை மணந்த அவர் 6 மாதத்தில் விவாகரத்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.