India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 7 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். 1. திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில் 2.குமரி – விஜய் வசந்த் 3.விருதுநகர் – மாணிக்கம் தாகூர் 4.சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் 5.கரூர் – ஜோதிமணி 6.கிருஷ்ணகிரி – கோபிநாத் 7.கடலூர் – விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.
✍கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்.✍நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.✍சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.✍தலைவிதி என்ற எண்ணமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.✍கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
– அண்ணல் அம்பேத்கர்
மகாராஷ்டிராவில் சிவசேனா உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. பால் தாக்கரேயின் வில் அம்பு சின்னத்தையே எதிரணியிடம் இழந்து நிற்கும் அவருக்கு வாழ்வா சாவா என்ற நிலையை தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. ED போன்ற விசாரணை அமைப்புகளின் சோதனை உள்ளிட்ட சவாலை எதிர்கொண்டுள்ள அவர், பாஜகவை தேர்தலில் எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென பழிதீர்க்கும் தீவிர முனைப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல் (17ஆவது சீசன்) தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டதாம். அதன்படி, மே 26ஆம் தேதி சென்னையில் பைனல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். குவாலிபையர், எலிமினேட்டர் போட்டிகள் குஜராத்தில் நடைபெறும் என அறியமுடிகிறது.
இயக்குநர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், நிவினுக்கு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
▶மார்ச் – 24 | பங்குனி – 11
▶கிழமை: ஞாயிறு | திதி: பௌர்ணமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:00 – 04:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மதியம் 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
மத்திய அரசின் பாரத் அரிசி & கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3 மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய அனுமதி ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். கிலோ அரிசி ₹29-க்கும், கிலோ கோதுமை ₹27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
KKR அணியின் ஹர்ஷித் ராணாவின் செயலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், ராணா பறக்கும் முத்தமிட்டார். இதனைக் கண்ட கவாஸ்கர், “இதெல்லாம் தேவையில்லாத வேலை மிஸ்டர் ராணா. பேட்மேன்கள் பவுண்டரி அடிக்கும்போது, உங்களுக்கு முத்தமிட்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் தாங்குவீர்களா” என்று கூறினார்.
மத்தியபிரதேசம் போபால் அருகே காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் துடித்த அவருக்கு ஓடும் ரயிலுக்குள்ளேயே அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சம்பவமறிந்த ரயில்வே போலீசார் தாய்-சேய் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த குழந்தைக்கு ‘காமயானி’ என பெயர் சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த இஞ்சி மல்லி கசாயம் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி கொத்தமல்லியை சுத்தப்படுத்தி, பூண்டு, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு கலந்து, இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் 3 நாள்கள் குடித்தால் போதும், கல்லீரலில் உள்ள தொற்று & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.
Sorry, no posts matched your criteria.