India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளை மட்டும், சுமார் 35 கோடி பேர் தொலைக்காட்சி வாயிலாக கண்டு ரசித்துள்ளனர். இதனால் 2024 ஐபிஎல் தொடர், ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த தொடராக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த ஐபிஎல் தொடரில், ரச்சின் ரவீந்திரா, மயங்க் யாதவ், ஷஷாங் சிங் போன்ற நிறைய புதுமுக வீரர்கள் மற்றும் இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் விதிகளை மீறப்படுவதை படம் பிடித்து தேர்தல் கமிஷனுக்கு மக்கள் வழங்குவதற்காக சி-விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. அப்படி அனுப்பப்படும் புகார்களுக்கு, 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியா முழுவதும் இதுவரை 1,25,939 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,25,551 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 71,168 புகார்கள் பதிவாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை, காங்கிரஸ் கட்சி தீவிரமாக மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
▶இதில் வைட்டமின் C, B6 மற்றும் மாங்கனீஸ், செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
▶நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நோய் வரும் அபாயத்தையும் குறைக்கும்.
▶இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
▶இதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், செல்களைப் பாதுகாக்க உதவும்.
▶உடல் வீக்கம், அழற்சி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வளிக்கும்.
நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் என நடிகை ஆண்ட்ரியா வெளிப்படையாக கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்ல முடியாது. ஆனால், அவர்களுக்கு பட வாய்ப்பு கொஞ்சமாகத் தான் இருக்கும். ஏனெனில், சில கதைகளுக்கு கவர்ச்சி தேவைப்படும். அந்த சமயத்தில், கவர்ச்சி காட்டாத நடிகைகள் கண்களுக்கு தெரியமாட்டார்கள். ஒரு பெண் அழகாக இருந்தால், அதை கொண்டாட வேண்டும்” என பதிலளித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், மேலும் ஒரு புதிய சாதனை பதிவாகியுள்ளது. நடந்து முடிந்த 17 போட்டிகளில், இதுவரை 300 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், முதல் 17 போட்டிகளில், 300 சிக்சர்கள் விளாசியது இதுவே முதல்முறை ஆகும். குறிப்பாக, MI – SRH இடையேயான போட்டியில் மட்டும் 38 சிக்சர்கள் பதிவாகியுள்ளது. 2023இல் 259 சிக்சர்களும், 2020இல் 258 சிக்சர்களும், 2018இல் 245 சிக்சர்களும் பதிவாகியுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பாவுக்கு அருகே நேற்றிரவு 9.34 மணிக்கு 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் உடன்பாடு எட்டப்பட்டது.
1710 – பிரிட்டனில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது.
1795 – பிரான்சுக்கும், புருசியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1804 – ஸ்காட்லாந்தில் முதல் முறையாக விண் வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
1879 – பொலிவியா, பெரு மீது சிலி போரை அறிவித்தது. (பசிபிக் போர்)
1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இதுதான் என எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விருதுநகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழ்நாட்டிற்கு பாஜக அரசால் எந்த திட்டமும் வராது. மழை, வெள்ளம் வந்தால், நிவாரணம் கூட வராது. நாம் கஷ்டப்பட்ட சமயத்தில் ஒரு முறை கூட வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
தனுஷூடன் சண்டை போட்டு 6 வருடங்கள் பேசாமல் இருந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “சில நடிகர்கள், இயக்குநர்களுடன் மட்டும் தான் சினிமாவைத் தாண்டிய நட்பு அமையும். அப்படியான நல்ல நட்பு எனக்கும் தனுஷூக்கும் உண்டு. நண்பர்கள் என்றால் சண்டை வருவதும் சகஜம் தான். இப்போது எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விட்டது. பழையபடி நல்ல நண்பர்களாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.