India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியல் கட்சிகள் வருமான வரியே கட்டத் தேவையில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மயிலையில் பேசிய அவர், கட்சிகள் வருமான வரி கட்ட வேண்டாம் என்ற விதி இருந்தும், காங்கிரஸ் கட்சி ரூ.3,822 கோடி வரி கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், ரூ.11 கோடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள் என விமர்சித்தார்.
நெல்லை அருகே உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். பாளை.யில் உள்ள திமுக அலுவலத்தில் ஆவுடையப்பன் தலைமையில் நேற்றிரவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது திடீரென அங்கு வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆவுடையப்பன் இதனை மறுத்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த மாதம் 1ஆம் தேதி 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்திருந்த நிலையில், கூடுதலாக 10,000 டன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது.
நேதாஜியை இந்தியாவின் முதல் பிரதமர் என்று மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா கூறியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நாடு சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முதல் பிரதமரான நேதாஜி எங்கு சென்றார் என தவறாக கேள்வியெழுப்பினார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் கங்கனாவை IQ 110 என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா கருத்து சொல்ல தேவையில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புவதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறியிருந்தார். இதற்கு தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அது குறித்து ஐ.நா கவலைப்படத் தேவையில்லை என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பியை வெல்லும் வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி வீரர் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் 203 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு பிறகு 2வது இடத்தில் 181 ரன்கள் குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கும், 3வது இடத்தில் 167 ரன்கள் எடுத்துள்ள ஹைதராபாத் வீரர் கிளாசன் உள்ளனர். குஜராத் வீரர் ஷூப்மன் கில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சோதனை மூலம் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகிகளை சோதனை மூலம் முடக்கிவிட்டால், தேர்தலில் ஆதாயம் அடையலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், திமுக எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் இதற்கெல்லாம் அஞ்சாது என சூளுரைத்தார். முன்னதாக நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அலுவலத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் என்ற கேள்வியுடன் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில Pay PM விலைப்பட்டியலை பகிர்ந்து விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தப்பிக்க Just ₹56 கோடி மட்டுமே, குண்டும் குழியுமாக ரோடு போட தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தம் எடுக்க ₹176 கோடி மட்டுமே என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் டிஜிட்டல் வழி பாடம் நடத்தும் வகையில் பிராட்பேண்ட் இணையதள இணைப்பை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பையா-2 திரைப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பையா படம், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லிங்குசாமி கூறுகையில், “பையா 2 கதையை தயார் செய்துவிட்டேன். பையா 2இல் வேறு காதலர்கள் உண்டு. அந்த படத்திலும் கார் உண்டு” என்றார்.
Sorry, no posts matched your criteria.