News April 6, 2024

‘உடன்பிறப்பே 2’ அறிவிப்பு விரைவில்

image

ஜோதிகாவின் 50ஆவது படமாக 2021 இல் வெளிவந்தது ‘உடன்பிறப்பே’ திரைப்படம். அண்ணன் – தங்கை இடையிலான நெஞ்சை உருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் 2ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அமேசான் OTT தளத்தில் நல்ல டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன்?

image

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆதலால் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

News April 6, 2024

இது மிகப்பெரிய அதிர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

image

திமுக எல்.எல்.ஏ. புகழேந்தி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலன் பாதித்த நிலையிலும் அதனைப்பற்றி சிந்திக்காமல் புகழேந்தி தேர்தல் பணியாற்றினார். மீண்டு வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால், இடி இறங்கியது போல் அவரது மறைவு செய்தி வந்திருக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ஜே.பி.நட்டா வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு

image

திருச்சி தொகுதியில் பாஜக சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழகம் வரும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இன்றிரவு திருச்சியில் வாகன பேரணி செல்ல இருந்தார். இந்நிலையில், நட்டா பங்கேற்கும் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலை காரணம் காட்டி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

ரோபோட் டாக்சியை களமிறக்குகிறது டெஸ்லா

image

அமெரிக்காவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆகஸ்ட் மாதம் ரோபோட் டாக்சியை களமிறக்க போவதாக அறிவித்துள்ளது. உலகில் தற்போது ஓடும் வாகனங்கள் டிரைவர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ரோபாட் மூலம் இயக்கப்படும் டாக்சியை அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறி வந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் பக்க பதிவில், ஆகஸ்ட் 8இல் ரோபோட் டாக்சியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

News April 6, 2024

சிப்காட் விவகாரம் ஆரணியில் வெற்றியைத் தீர்மானிக்குமா?

image

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைதுசெய்தது அனைவரும் அறிந்ததே. விவசாயிகள் & கூலித் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக கொண்ட ஆரணி தொகுதியில் இது திமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதனால், அங்கு வாக்கு கேட்க செல்லும் திமுகவினருக்கு வரவேற்பு இல்லையாம். இதை மையப்படுத்தி இப்போது அதிமுக தீவிர பிரசாரம் மேற்கொள்வதாக தகவல்.

News April 6, 2024

அசாதுதீன் ஓவைசிக்கு கொலை மிரட்டல்

image

மஜ்லீஸ் இ கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, தனக்கு கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு சமூகவலைதளங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

News April 6, 2024

ரத்தவாந்தி எடுத்து மரணம்

image

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்தார். முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரத்தவாந்தி எடுத்ததால், இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. திடீரென்று உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவர் காலமானார்.

News April 6, 2024

திமுக, காங்., தேர்தல் அறிக்கை: கிண்டலடித்த EX மினிஸ்டர்

image

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கானல் நீர் போன்றது; அதை பயன்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்த காங்., கட்சி, தற்போது மாநில அடிப்படையில் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதி அளித்திருப்பது நகைப்புக்குரியது என்றார்.

News April 6, 2024

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப்?

image

ஐபிஎல் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா & வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரைக் கருத்தில் கொண்டு அவரை தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழல் எழுந்துள்ளது.

error: Content is protected !!