India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 5ஆம் தேதி வந்த பயணிகளிடம் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 2 பயணிகள், அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமென திடீரென மிரட்டல் விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த 2 பேரையும் கைது செய்து, விமான நிலையை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலிவ் பச்சை (Olive green) நிற வாகனங்களை பதிவு செய்வதை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை வாகனங்கள் மட்டுமே இந்நிறத்தை பயன்படுத்த மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நிறத்தை ரேஞ்சர் காக்கி, எமரால்ட் பியர்ல் என வெவ்வேறு பெயர்களில் வெளியிடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக வருவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கேப்டனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவருக்கு இருப்பதாக தெரிவித்துள்ள வாகன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தை அவர் அடைவார் எனக் கூறியுள்ளார். நேற்றைய லக்னோ அணிக்கு எதிராக போட்டியில் கில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், வாகனின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோயாலும், மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 10இல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், இந்தியாவை ‘உலகின் புற்றுநோய் தலைநகர்’ என அழைக்கலாம் என்கின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் கழக இணை செயலாளருமான AKS அன்பழகன் (53) உடல்நலக் குறைவால் காலமானார். இவர், 2001ல் தி.மலை, பெரணமல்லூர் தொகுதி MLAவாக பதவி வகித்தார். 2006ல் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில் சீட் தராததால், அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகை கங்கனா ரணாவத், தனது புது பென்ஸ் காரில் மும்பையை வலம் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் இவர், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அரசியல் வருகை ஏற்கெனவே சலசலப்பை கிளப்பிய நிலையில், கட்சியில் இணைந்த கொஞ்ச நாள்களிலேயே ₹2.43 கோடி மதிப்புள்ள புது காரை வாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென குறுக்கிட்டு பிரசாரத்துக்குச் செல்லக் கூடாது என்று சசிகலாவை தடுத்தாராம். இதனால், தினகரன் மன வேதனையில் உள்ளாராம்.
மக்களவையில் மொத்தம் 543 எம்பி இடங்கள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அங்கு இருந்து எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு அதிகபட்சமாக 80 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 17 தனித் தொகுதிகளும் அடங்கும்.
அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் 6ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 29 தொகுதிகள் உள்ளன. இதையடுத்து 7ஆவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 28 தொகுதிகளும், 8ஆவது இடத்தில் உள்ள குஜராத்தில் 26 தொகுதிகளும், 9ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் தலா 25 தொகுதிகளும் உள்ளன. 10ஆவது இடத்தில் ஒடிசாவும் (21 தொகுதிகள்), 11ஆவது இடத்தில் கேரளாவும் (20 தொகுதிகள்) உள்ளன.
புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டண வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற ₹2,040, நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ₹5,110ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் இதைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
Sorry, no posts matched your criteria.