News April 8, 2024
கூடுதல் கட்டணம்.. தமிழக அரசு புதிய உத்தரவு

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டண வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற ₹2,040, நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ₹5,110ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் இதைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
Similar News
News December 15, 2025
தருமபுரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

தருமபுரி மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
40 தொகுதிகளில் காங்., போட்டியா?

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.
News December 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?


