India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த திமுக MLA புகழேந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவால் திடீரென மயக்கமடைந்த அவருக்கு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி இந்த ஒரே போட்டியில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் வீரர். 100+ பார்ட்னர்ஷிப்பில் அதிக முறை (28) பங்கேற்ற வீரர். ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் (8) அடித்த வீரர் என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கெயில் (6), பட்லர் (5) கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார். வில்லிவாக்கத்தில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை. டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடிய போது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை’ என்றார்.
கெஜ்ரிவால் மட்டுமின்றி தமிழகம், தெலங்கானா என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களையும் பாஜக கைது செய்யும் என ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அட்டூழியங்கள், அநீதிகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதால் தான், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக சாடிய அவர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பாஜகவில் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 183/3 ரன்கள் விளாசியுள்ளது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். டூபிளெசிஸ் (44), மேக்ஸ்வெல் (1) ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 2, பர்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024ன் 19ஆவது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 67 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனின் அதிகபட்ச ரன்களை கோலி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் மூலமாகவே நயன்தாரா அறிமுகமானதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளராக தனுஷ் பரிந்துரைத்ததாக கூறினார். தனுஷ் உதவியுடன் நயன்தாராவை சந்தித்த விக்னேஷ் சிவன், கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாலேயே விஜய் சேதுபதி அப்படத்தில் கமிட் ஆனதாகவும் கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக MLA புகழேந்தி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், வைக்கப்பட்டுள்ள பூத உடலுக்கு மக்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து புகழேந்தியின் சொந்த ஊரான திருவாதித்தினை கிராமத்திற்கு நாளை காலை 8 மணிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஏழைப் பெண்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலுத்தப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிப் பேசிய அவர், மகாலட்சுமி திட்டம் இந்தியாவின் புரட்சிகர திட்டம் என பெருமை தெரிவித்தார். ஏழை குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1 லட்சம் செலுத்தப்போகிறோம். இதனால் குறைந்த வருமானம் கொண்ட ஏழைகளே இனி இருக்க மாட்டார்கள் என்றார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என ஸ்டாலின் சொன்னதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘ஸ்டாலின் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், அங்கு ஏழரைச்சனி பிடித்துக் கொள்ளும். ஸ்டாலின் அப்படி ராசியானவர். ஸ்டாலின் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.