India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரியனை நிலவு மறைக்கும் முழு சூரிய கிரகணம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதனை இந்தியாவில் இருந்து காண முடியாது என்பதால் பலர் அதிக நாட்டம் கொள்வதில்லை. இருப்பினும், நம்பிக்கை இருப்போர், தர்ப்பை புற்களை உணவில் போட்டு வைக்கலாம், வீட்டில் அடுப்பை பற்ற வைக்காமல் இருப்பது நல்லது, கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்கலாம், வீட்டிலேயே இறைவனுக்கு பூஜைகள் செய்யலாம். இரவு 9.12 மணி முதல் 1.30 வரை கிரகணம் நடைபெறும்.
தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்திவரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஏற்கெனவே புகார் அளிக்கப்பட நிலையில் மீண்டும் ராணுவம் குறித்து பிரதமர் பேசி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காங்., தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பிரதமர் விமர்சித்ததற்கு எதிராகவும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.
திரைப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காதல் போஸ்ட் போட்டு வருவது இப்போது பேசும் பொருளாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா தனது குறிப்பில், “என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு நன்றி” என எழுதியது இருவரது ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அதற்கு விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்ன பதில் வரும் அவரை பின்தொடரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் காங்கிரஸ், I.N.D.I.A கூட்டணி கடும் கோபத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘மக்களின் 500 ஆண்டு கனவு நனவாகியுள்ளது. ஆனால் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை அழைப்பிதழை காங்கிரஸ் நிராகரித்தது மட்டுமின்றி, அதை தவறு என கூறிய காங்கிரஸ் தலைவர்களையும் அக்கட்சியில் இருந்தே நீக்கியது’ என்றார்.
தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 மற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களான ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளன.
நடிகை நித்யா மேனன் இன்று தனது 38ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ‘DearEXes’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் & போப்டர் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் காமினி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மக்கள் தந்த அதிகாரத்தை சரியான வழியில் பயன்படுத்திய அரசியல்வாதிகளின் பயோபிக்கில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார். ஊடகமொன்று அளித்த பேட்டியில், “இந்தியாவில் பல நல்ல மக்கள் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை இப்போது இருக்கும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என்றார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை விற்போம் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இது தொடர்பான பிரசாரத்தின் போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, அதை செய்யாமல் மதுபானங்களின் விலையை மட்டும் உயர்த்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடவில்லை. ஆல்ரவுண்டரான அவர், ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் எடுத்ததுடன், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ரஞ்சி போட்டியில் அவரது செயல்பாடு மந்தமாகவே இருந்தது. இதனால் நடப்பு சீசனில் அவர் மும்பை அணியில் இடம் பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.