India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிவியை பார்த்துதான் இபிஎஸ் எதையும் தெரிந்துகொள்கிறார் என கனிமொழி கூறியுள்ளார். தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பேட்டியளித்த அவர், “திமுகவின் வெற்றி தூத்துக்குடி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பிரகாசமாக உள்ளது. எதிர்த்து யார் போட்டியிட்டாலும் மக்கள் நிச்சயம் திமுகவை வெற்றி பெறச் செய்வார்கள். மழை பாதிப்பு உள்ளிட்ட பல நேரங்களில் மக்களுடன் திமுக இருந்தது. மக்களுக்கு அது நன்றாகவே புரியும்” என்றார்.
ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை. அவை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாதது ஏன் என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், “மதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால் பொது சின்னம் தருவோம் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிகவுக்கு பொது சின்னம் மறுக்கப்படுகிறது. பானையில் 1 MP, 4 MLA உள்ளோம். குக்கர், சைக்கிள் சின்னங்களில் எத்தனை எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளனர்” எனக் கேட்டுள்ளார்.
கூட்டணியில் இருந்தாலும், பாஜகவை பாமக விமர்சிக்கும் என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “மாநில நலனுக்காக பாஜகவை இதற்கு முன்பு பாமக விமர்சித்துள்ளது. தற்போது கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டால், பாஜகவை பாமக விமர்சிக்கும்” என்றார்.
கட்சித் தலைவர்கள் மகன்களின் அரசியலால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், துரை வைகோ, விஜய பிரபாகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய தேர்தல்களில் குடும்ப அரசியலுக்கு எதிராக பிரசாரம் நடந்த நிலையில், இம்முறை தலைவர்களும், மகன்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதை மக்கள் கண்டு வருகின்றனர். இதை மக்கள் ஏற்பார்களா என காலமே முடிவு செய்யும்.
தேர்தலுக்கு தேர்தல் பாமக அணி மாறுவதாக இபிஎஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலின்போது பாமகவை திமுகவும், அதிமுகவும் பயன்படுத்தி கொண்டன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவால்தான், அதிமுக 66 தொகுதிகளில் வென்றது. 36 தொகுதிகளில் பாமக வாக்குவங்கிதான், அதிமுகவுக்கு வெற்றியை தேடித் தந்தது” என்றார்.
வாய்ப்புக்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய மாட்டேன் என சின்னத்திரை நடிகை ஆர்த்திகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “என் திறமைக்கு என்ன வாய்ப்பு வருகிறதோ அதுவே மகிழ்ச்சி. அதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அட்ஜெஸ்மென்ட் செய்தால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் இல்லை. அப்படியான சூழ்நிலை வந்தால் எனக்கு நடிப்பதைத் தவிர்த்து வேறு வேலைகளும் தெரியும்” என்றார்.
கெஜ்ரிவால் கைது ஆம் ஆத்மிக்கு அனுதாப வாக்குகளை பெற்று தரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “கெஜ்ரிவால் கைது என்பது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு. ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் தாக்குதல். எதிர்கட்சிகளை அடக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. இந்த முறை பாஜக அதற்கான விலையைக் கொடுக்கும்” எனக் கூறினார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா சூசகமாக தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியை கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து அரசு இயங்காது என உறுதியளிக்கிறேன் என்று பதிலளித்தார். அதாவது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.