India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.
ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தம்பதி பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை சங்கீதா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு ஆட்லின் விக்டோரியா எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது பிஸியாக நடித்து வரும் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நாட்டில் நீதி வழங்குவதில் கர்நாடகமும், சிறைத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகமும் முதலிடத்தை பிடித்துள்ளன. 18 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. நீதி, காவல், சிறை, சட்ட சேவைகள் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனிதவளம், வேலை பளு, கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
புதுவையில் NDA கூட்டணியில் தவெக இல்லை என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். புதுவை பாஜக உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், தவெக கூட்டணியில் இடம்பெறுமா என நிர்வாகிகள் கேட்டனர். விஜய் கூட்டணிக்கு வருவார் என எண்ணி தேர்தல் பணியாற்ற வேண்டாம் என்றார். NDA கூட்டணியில் பாஜக, அதிமுக, NR காங்கிரஸ் மட்டுமே இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வாழ்வதாரத்துக்காக கடலையே நம்பியிருந்த மீனவர்கள் தற்போது சிறைவாசத்தை கண்டு அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலம் சிறை வைக்கப்படுவதால் அவர்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
‘கேப்டன் பிரபாகரன்’ படம் கொடுத்த வெற்றியும், தனக்கு கிடைத்த புகழும் அதிகம் என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தமாதிரி வெற்றி கிடைக்க 10 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், ‘படையப்பா’ படத்தில் தான் அப்படிப்பட்ட வெற்றி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘ஆட்டமா தேரோட்டமா’ காலத்தால் அழியாத பாடல் எனவும், அப்பாடல் மூலம் தனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையின் கிங் என அழைக்கப்படும் வாரன் பஃபெட், தங்கத்தை மதிப்புமிக்கதாக கருதவில்லை. அவரிடம் ₹12 லட்சம் கோடி சொத்துக்கள் இருந்தும், தங்கத்தில் ஒரு பைசா கூட முதலீடு செய்யவில்லை. தங்கமா (அ) நிலமா? என கேட்டால், நிலத்தையே மதிப்புமிக்கதாக கருதுகிறார். தங்கத்தை விட நிலத்தில் முதலீடு, தொழில் செய்வதுதான் பெஸ்ட் என கூறுகிறார். இதன்மூலம், நீண்ட காலத்திற்கு நிலையான பலன்கள் கிடைக்கும் என நம்புகிறார்.
பண்டிகை காலங்களில் டிக்கெட் புக் செய்யும் போது, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து புக் செய்தால் கட்டணத்தில் 20% தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13 முதல் 26-ம் தேதி வரை சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதன்போதே, நவ., 17 முதல் டிச., 1-ம் தேதி வரையில் ரிட்டன் டிக்கெட்டுக்கான புக்கிங் செய்ய வேண்டும். இதற்கான புக்கிங் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்றுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதி நிலைநாட்டும் என நம்புவதாக ‘இது போர்களின் காலம் அல்ல’ என்ற பிரதமர் மோடியின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்தியா தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் வைத்து டிரம்ப் -புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.
Sorry, no posts matched your criteria.