News August 10, 2025
தமிழக மீனவர்கள் 7 பேரை விடுவிக்கக் கோரி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வாழ்வதாரத்துக்காக கடலையே நம்பியிருந்த மீனவர்கள் தற்போது சிறைவாசத்தை கண்டு அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலம் சிறை வைக்கப்படுவதால் அவர்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
போனுக்கு அடிமையானால் இப்படித்தான் மாறுவீர்கள்!

ஒருவர் நீண்ட நேரமாக ஒரு இடத்தில் இருந்து நகராமல், போனையே பார்த்து கொண்டு இருந்தால், அவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி உருமாறுவார் என்பதை WeWard எனும் ஆப், போட்டோவாக வெளியிட்டுள்ளது. WHO உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிடம் தரவுகள் பெறப்பட்டு, AI மூலம் இந்த போட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. கூன் விழுவது, முடி உதிர்வது, – வயதுக்கு மீறிய தோற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ONGC-ல் வேலை… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் 2,623 அப்ரென்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.6-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 18-24 வயதிற்கு உட்பட்டவர்கள் ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 8, 2025
2026 தேர்தலில் SIR தான் ஹீரோ: கடம்பூர் ராஜூ

2026 தேர்தலில் SIR தான் ஹீரோ ஆக இருக்கும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 12,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அதனால் தான் SIR என்றாலே திமுகவுக்கு பயம், நடுக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். SIR சிறப்பாக நடைபெற்று தகுதியானவர்கள் வாக்களிக்கும் போதும், கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று EPS முதல்வராக வருவார் என்றும், கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.


