India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கணினி ஆபரேட்டர், சுகாதார ஆய்வாளர் மெஷினிஸ்ட் உள்ளிட்ட 1,113 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் மே மாதம் 1ஆம் தேதிக்குள் <
கார்த்தி மற்றும் தமன்னா நடித்த ‘பையா’ திரைப்படம், வரும் 11ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி கார்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, “பையா படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக இருப்பதாக என் நண்பர்கள் கூறுவார்கள்” என கார்த்தி தெரிவித்துள்ளார். பெரும் வெற்றியைத் தந்த இப்படம், தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகவுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகான அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னையில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து மீனாட்சி என்ற அப்பெண், பணிமனையை திறந்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ திரைப்படம், வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இதற்கு, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தற்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி தான் உலகில் அதிகமான நபர்களால் மிகவும் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரசல் புகழாரம் சூட்டியுள்ளார். KKR அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தின்போது, தோனி பேட்டிங் செய்ய வந்தது தெரிந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து, சத்தம் எழுப்பினர். வைரலான இந்த காட்சியை ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்து, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அதிகளவில் வெப்பம் இருப்பதால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 20,125 மெகாவாட் மின்தேவை பதிவாகியுள்ளது. ஏப்.5ல் 19,580 மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வு 3 நாள் இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பூஜ்ஜியம் என்ற கருத்துக்கு முதலில் இலக்கத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். குவாலியர் கோட்டையில் பூஜ்ஜியம் குறித்த ஆதாரம் உள்ளது. பூஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. ஆனாலும், தரையில் கற்களைக் கொண்டு கணக்கீடு செய்தபோது பூஜ்ஜியம் உருவானதாக நம்பப்படுகிறது. பூஜ்ஜிய வடிவ கற்களை தரையில் வைக்கும்போது விழும் உருண்டையான அச்சுகளில் இருந்து பூஜ்ஜியம் உருவானதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிச்சனூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுகிறது. வடக்கில் I.N.D.I.A கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.
ஐபிஎல் வரலாற்றில், 1,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளை பிடித்து, CSK வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்துவீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஃபில் சால்ட், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது கேட்சுகளை பிடித்து இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்தவொரு வீரரும் படைத்ததில்லை.
Sorry, no posts matched your criteria.