News April 9, 2024
பாஜக பெண் நிர்வாகி கைது

சென்னையில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து மீனாட்சி என்ற அப்பெண், பணிமனையை திறந்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
நீங்கள் இதில் படம் பார்த்தது உண்டா? Must feel..

இன்று OTT-யில் படம் பார்த்து வரும் நாம், முன்னதாக டிவியில் படம் பார்த்தோம். அப்போது, DVD-க்களில் படங்களை கண்டு களித்திருப்போம். பெற்றோரிடம் அடம்பிடித்து ₹20, ₹40 ரூபாய்க்கு சிடி வாங்கி படம் பார்த்த காலங்கள் அழகானவை. இதற்காக டிவிடி பிளேயர் வாங்கி, அதிலுள்ள மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஒயரை சரியாக கனெக்ட் செய்வதில் நாம் தான் கிங் என்று கூட நினைத்திருப்போம். நீங்கள் கடைசியாக சிடியில் பார்த்த படம் எது?
News December 12, 2025
ரயில்வேக்கு சொந்தமாக இவ்வளவு நிலமா?

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், RPF & உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
News December 12, 2025
நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.


