India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேட்பாளர்களுக்கும் தனிநபர் சுதந்திரம் உள்ளதாக கூறிய நீதிமன்றம், விலை உயர்ந்த முக்கிய சொத்துகள் குறித்து மட்டும் தெரிவித்தால் போதும் என தெரிவித்துள்ளது. வேட்பாளரின் விவரங்களை வாக்காளர் அறிய வேண்டுமென்றாலும், தனியுரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.
பிரித்தாலும் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டால் திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரம் செய்த அவர், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என கேள்வி எழுப்பினார். இனம், மதம், சாதியின் பெயரால் திமுக மக்களை தூண்டி விடுகிறது. திமுகவின் மோசமான அரசியலை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் என சூளுரைத்தார்.
விளம்பர வழக்கில் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி மீதான அனைத்து புகார்களையும் மாநில அரசுக்கு அனுப்பியதாக தெரிவித்த நீதிபதிகள், புகார் குறித்து ஆய்வாளர்கள் அறிக்கை அளிக்காமல் அமைதி காப்பதைக் கண்டித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அடுத்த ஐபிஎல் போட்டிக்கு டெல்லி அணியில் ரோஹித் ஷர்மா சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதையடுத்து 2 பேருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் டெல்லி அணி உரிமையாளர் பர்த் ஜிண்டால், பண்ட் உடன் ரோஹித் பேசியதை வைத்து, அவர் டெல்லி அணியில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிலிப்பித்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள் மேனகா காந்தி, மகன் வருண் காந்தி புறக்கணித்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிப்பித் எம்பியாக 1996 முதல் இருவரும் மாறி மாறி பதவி வகித்தனர். இம்முறை வருண் காந்திக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ள நிலையில், மோடியின் நேற்றைய கூட்டத்தை 2 பேரும் புறக்கணித்தனர்.
ஆந்திராவில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், யுகாதி பண்டிகையொட்டி பட்டயக்குடம் பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டிற்கு சென்ற அவரது பேரன்கள், அவருக்கு ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பொங்கல் என பாகுபலி விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவற்றை ருசி பார்த்த அவர், மனம் நெகிழ்ந்து போனார்.
‘இந்தியன் 2’ படத்தில் நடிகை மனிஷா கொய்ராலா நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் முதல் பாகத்தில், மகன் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். ஆனால், 2ஆம் பாகத்தில் அவருக்கு பெரிய காட்சிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நீலகிரியில் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. ஊட்டி சட்டபேரவை தொகுதி- 94,256, குன்னூர் சட்டபேரவை தொகுதி- 91,614, கூடலூர் சட்டபேரவை தொகுதி- 1,87,754 வாக்காளர்கள் இருந்தனர். இதில் ஊட்டியில் 6,500, குன்னூரில் 2,500, கூடலூரில் 1,000 பேர் என மொத்தம் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அவர்கள் பெயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இபிஎஸ் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்து, கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் யாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது எனத் தெரியாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இபிஎஸ் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி, அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ஏர்டெல் உரிமையாளர் சுனில் பார்தி மிடெலுக்கு ₹74,064 கோடி சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவரின் மகளான இய்சா பார்தி பரிஷா, லண்டன் வாழ் இந்திய தொழிலதிபரான சரண் பரிஷாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார். சுனில் பார்தி அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் இய்சா, அழகு சாதன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 29,000 பேர் தொடர்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.