News March 30, 2024

ஏப். 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (1)

image

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு

News March 30, 2024

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (2)

image

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகளை காணலாம். 3) ரூ.5 கோடிக்கும் அதிகமான வருமானம் கொண்டோருக்கு விதிக்கப்படும் சர் சார்ஜ் வரியை 37%ல் இருந்து 25% ஆக குறைத்தல் 4) 2023 ஏப்ரல் 1க்கு பிறகு அளிக்கப்படும் காப்பீடு முதிர்வு தொகையை வரி கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் 5) அரசு சாரா ஊழியர்களின் விடுப்பு பண வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துதல்

News March 30, 2024

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (3)

image

ஏப்ரல் 1 முதல் கீழ்காணும் வருமான வரி அமலுக்கு வருகிறது. 1) ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 5%, 2) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உடையோருக்கு 10%, 3) ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 15%, 4) ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20%, 5) ரூ.15 லட்சம், அதற்கு மேல் வருமானம் உடையோருக்கு 30% வரி அமலுக்கு வரவுள்ளது.

News March 30, 2024

கேரள வேட்பாளரை ஆதரித்து கமல் பிரசாரம்

image

கேரளாவின் வடகரா தொகுதியில் இடது முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மநீம தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இம்முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறிய அவர், மத்தியில் சைலஜா போன்றவர்கள் நமது குரலை எதிரொலிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

News March 30, 2024

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!

image

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என பிரதமர் மோடி வருந்துகிறார். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர் எட்டு நாள் கூட நிற்காது. ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 30, 2024

பிரதமர் மோடி இந்தியில் பரப்புரை செய்வதன் நோக்கம்?

image

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த பிரதமர் மோடி, இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை என விமர்சித்த அவர், தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மேலும் ஒரு டெல்லி அமைச்சருக்கு E.D. சம்மன்

image

மேலும் ஒரு டெல்லி அமைச்சருக்கு E.D. சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பி E.D. கைது செய்தது. முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த 21ஆம் தேதி கைதானார். இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு E.D. சம்மன் அனுப்பியுள்ளது.

News March 30, 2024

பள்ளி விடுமுறையில் மாற்றம்

image

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப்போகிறது. ரம்ஜான், தமிழ், தெலுங்கு புத்தாண்டு, தேர்தல் என பல்வேறு காரணங்களால் ஏப்.10, 12ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்.22, 23ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கோடை விடுமுறை ஏப்.13ல் தொடங்குவதற்கு பதில் ஏப்.26ல் தொடங்க உள்ளது.

News March 30, 2024

BREAKING: விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி?

image

பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விசிகவும் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

News March 30, 2024

வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசுகிறார்

image

வாயை திறந்தால் அண்ணாமலை பொய் மட்டுமே பேசுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், “சிலர் எப்போதாவது பொய் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால் பொய் பேசுவதையே தினசரி வாடிக்கையாக அண்ணாமலை வைத்துள்ளார். 5 வயதில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 புத்தகம் படித்தால் கூட 20 ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்க முடியாது. ஆனால், இவர் எப்படி படித்து முடித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது” எனக் கூறினார்.

error: Content is protected !!