India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் அசாமில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சாரில் பிரசாரம் செய்த அவர், நாங்கள் அனைத்து மதங்களையும் நேசிக்கிறோம். மத அடிப்படையில் மக்களை
பிளவுபடுத்தும் அரசியலை வெறுக்கிறோம் எனக் கூறினார்.
தன்னை நோக்கி எழுந்த விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கிய DC அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். GTக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், அசத்திய DC அணியின் வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 2 கேட்ச் & 2 ஸ்டம்பிங் செய்த அவர், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மேட்சை ஃபினிஷிங் செய்தார். 2019க்குப் பின் 5 ஆண்டுகள் கழித்து 7ஆவது முறையாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
மியான்மரில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக சிறையில் தனிமைச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியை (78) வீட்டு காவலுக்கு அந்நாட்டு ராணுவம் மாற்றியுள்ளது. ஆசியாவின் ‘அமைதிப் புறா’ என்றழைக்கப்படும் அவர், மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய காரணத்தால் அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
‘டைம்’ இதழ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான கலைஞர் பிரபலங்கள் பட்டியலில், ஆலியா பட் & பாலிவுட் இயக்குநர் தேவ் பட்டேல் ஆகிய இருவர் இடம்பெற்றுள்ளனர்.
குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் காந்தி ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலக்காட்டில் பிரசாரம் செய்த அவர், “பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி ராகுல் பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடைசிவரை வாய் திறக்கவில்லை” எனக் கூறினார்.
இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*மோடியின் வாக்குறுதிகளை நம்பி கேரள மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – பினராயி விஜயன்
*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் – ஜக்கி வாசுதேவ்
*செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
*வெப்ப அலை காரணமாக மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றப்பட்டார்.
*GT அணிக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில் DC அணி அபார வென்றது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், தகுதியான ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்போம் என அந்நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிருதுவாக அரைத்தால் கிடைப்பதுதான் மைதா. அதே தவிடு நீக்கிய கோதுமையை சாதாரணமாக அரைத்தால் கிடைப்பது ரவை. இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், மைதா மீதான பயம் ரவை மீது இருப்பதில்லை. மைதா குறித்து பரவும் சில தவறான தகவல்களே இதற்கு காரணம். மைதாவை அதிகம் உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்லதான். ஆனால், மைதா மீதான அதீத பயம் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
Sorry, no posts matched your criteria.